உதகை மாவட்ட பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 2 ஆம் நாளாக நேற்றும் சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இவர்கள்தான் கோடநாடு பங்களாவில் கொள்ளையடிக்கத் தேவையான கூடுதல் ஆள்களையும் பொருள்களையும் ஏற்பாடு செய்தவர்கள் என்று முந்தைய விசாரணை முடிவில் காவல் துறையினர் குறிப்பிட்டிருந்தனர். வழக்கில் 5 மற்றும் ஆறாவது நபர்களாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த சதீஷன், பிஜின்குட்டி ஆகியோரிடமும் தனிப்படையினர் விசாரணை நடத்தினர். இவர்களிடம் 7 மணி நேரம் துருவித்துருவி பல்வேறு கேள்விகளை காவல் துறையினர் கேட்டனர்.