5 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

5 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
5 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 நாள் சுற்றுப் பயணமாக ஆகஸ்ட் 2-ஆம் தேதி தமிழகம் வருகிறார்.

தமிழக சட்டப்பேரவையின் 100வது ஆண்டு விழாவையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் டெல்லி சென்று குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளார், அதன்படி 5 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். 

ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை 5 மணிக்கு சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தைத் திறக்கிறார். முதல்வரும், குடியரசுத் தலைவரும் ஒரே மேடையில் அமர்ந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.

அதில் சபாநாயகர் அப்பாவு மற்றும் துணை சபாநாயகர் பிச்சாண்டியும் பங்கேற்கின்றனர். ஆக்ஸ்ட் 3 முதல் 6ஆம் தேதிவரை நீலகிரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com