சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு

சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு
சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவையொட்டி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவ படத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த் சட்டப்பேரவையில் திறந்து வந்தார்.

தமிழக சட்டப்பேரவையில் 16-வது தலைவராக கருணாநிதியின் படம் இடம்பெறுகிறது. முதலமைச்சர் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கைக்கு நேர் எதிராக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவப்படம் திறக்கப்பட்டுள்ளது. படத்திற்கு கீழ் “காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர். இந்த விழாவை அதிமுக புறக்கணித்துள்ள நிலையில், பாஜக சார்பில் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை விழாவில் கலந்து கொண்டார். கீ.வீரமணி, வைகோ, திருமாவளவன், கே.எஸ்.அழகிரி, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், ஜி.கே.வாசன் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். 

தலைமைச் செயலகத்தை சுற்றி, துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் ஐந்தடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 5 துணை ஆணையர்கள் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தலைமைச்செயலக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தலைமைச் செயலகத்திற்குள் வரும் வாகனங்களை சோதனைக்கு உட்படுத்தி அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com