மதியம் ஆசையாய் பேசிய காதல் கர்ப்பிணி மனைவி மாலையில் திடீர் விபரீத முடிவு.. கதறி அழுத கணவன்

மதியம் ஆசையாய் பேசிய காதல் கர்ப்பிணி மனைவி மாலையில் திடீர் விபரீத முடிவு.. கதறி அழுத கணவன்
மதியம் ஆசையாய் பேசிய காதல் கர்ப்பிணி மனைவி மாலையில் திடீர் விபரீத முடிவு.. கதறி அழுத கணவன்

மதுரையில் காதல் திருமணம் செய்த கர்ப்பிணி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள தேனூர் பகுதியைச் சேர்ந்த ராமு- வனிதா தம்பதியினரின் மகள் உதயா. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக மதுரையை சேர்ந்த பிரித்விராஜ் என்ற இளைஞரை காதலித்து கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஆரம்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் வந்துள்ளது. இதனிடையே கடந்த ஜனவரி மாதம் உதயா கர்ப்பமான நிலையில் தனது கணவருடன் மதுரை பைபாஸ் சாலை சத்தியமூர்த்தி நகரில் வாடகை வீட்டில் இருவரும் தனியாக தங்கியுள்ளனர். கணவர் பிரித்விராஜ் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்த நிலையில் நேற்று மதியம் உதயா தொலைபேசியில் சாதாரணாமக பேசியுள்ளார்.

இந்நிலையில், நேற்றிரவு நீண்ட நேரமாகியும் கதவு திறக்காத நிலையில் அருகிலுள்ளவர்கள் அதனை கவனித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அங்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்து பார்த்தபோது வீட்டின் அறையில் இருந்த மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் கண்டெடுத்துள்ளனர். இதனையடுத்து உடலை மீட்ட காவல்துறையினர் தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

நேற்று மதியம் தனது கணவர் பிரித்விராஜுடன் உதயா போனில் மகிழ்ச்சியாக பேசிவிட்டு பின் வைத்துள்ளார். இந்நிலையில் திடீரென மாலையிலயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கணவருக்கு அருகில் உள்ளவர்கள் தகவல் அளித்தையடுத்து பதறி அடித்து ஓடி வந்த கணவர் பிரித்விராஜ் காதல் மனைவி தற்கொலை செய்ததை பார்த்து கதறி அழுதார்.

தனது மகளை காதலித்து திருமணம் செய்த கணவர் பிரித்விராஜ் நல்லபடியாக வாழ்ந்துவந்த நிலையில் தனது மகளின் தற்கொலையில் கணவர் பிரித்விராஜின் தாயார் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக உதயாவின் தாயார் கூறிய புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் மதுரை கோட்டாட்சியர் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. இதில் இரு தரப்பினரும் நேரில் ஆஜராகினர். காதல் திருமணம் செய்து வாழ்ந்துவந்த நிலையில் 3 மாத கர்ப்பிணி திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com