10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முன் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை முதன்மைக் கல்வி அலுவலரின் கீழ் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கான 10 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு சென்னை மாவட்ட தேர்வுக் குழுவின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள முன் அரையாண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் ஆசிரியர்களினால், பாடங்களை முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.