பாலமேடு ஜல்லிக்கட்டில் 21 காளைகளை அடக்கிய பிரபாகரன் முதலிடம்

பாலமேடு ஜல்லிக்கட்டில் 21 காளைகளை அடக்கிய பிரபாகரன் முதலிடம்

பாலமேடு ஜல்லிக்கட்டில் 21 காளைகளை அடக்கிய பிரபாகரன் முதலிடம்
Published on

பாலமேடு ஜல்லிக்கட்டில் மதுரை பொதும்பை கிராமத்தைச் சேர்ந்த பிராபகரன் 7 சுற்றுகள் முடிவில் 21 காளைகள் பிடித்து முதலிடம் பெற்றுள்ளார்.

மதுரை மாவட்டம் பாலமேட்டில் காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. இதில் மதுரை பொதும்பை கிராமத்தைச் சேர்ந்த பிராபகரன் 7 சுற்றுகள் முடிவில் 21 காளைகள் பிடித்து முதலிடம் பெற்றுள்ளார். அவருக்கு பரிசாக இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டில் வென்ற மாடுபிடி வீரர்களுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com