சுர்ஜித்தை மீட்க களத்திற்கு வந்த அதிக சக்தி கொண்ட இரண்டாவது இயந்திரம்

சுர்ஜித்தை மீட்க களத்திற்கு வந்த அதிக சக்தி கொண்ட இரண்டாவது இயந்திரம்

சுர்ஜித்தை மீட்க களத்திற்கு வந்த அதிக சக்தி கொண்ட இரண்டாவது இயந்திரம்

துளையிடுவதற்காக அதிக சக்தி கொண்ட இரண்டாவது இயந்திரம் நடுகாட்டுப்பட்டிக்கு வந்துள்ளது. 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித், ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தான். தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி, 47 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.  

பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆழ்துளைக் கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழித் தோண்டப்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. 

ஆழ்துளைக் கிணறுக்கு அருகில் 2 மீட்டர் தொலைவில் 1 மீட்டர் அகலம், 110 அடி ஆழத்தில் இந்தக் குழி தோண்டப்பட்டு வருகிறது. ரிக் இயந்திரம் மூலம் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் 100 அடி குழியை தோண்ட முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோண்டும் இடத்தில் பாறைகள் இருப்பதால் குழித் தோண்டும் பணி தாமதமானது. இதனைத் தொடர்ந்து ராமநாதபுரத்திலிருந்து அதிக திறன் கொண்ட மற்றொரு இயந்திரத்தை நடுகாட்டுப்பட்டிக்கு  கொண்டுவர மீட்புப் படையினர் திட்டமிட்டனர்.

இந்நிலையில் ராமநாதபுரத்தில் இருந்து இரண்டாவது இயந்திரம் தற்போது நடுகாட்டுப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் துளையிடும் பணி தீவிரப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டாவது இயந்திரம் முதல் இயந்திரத்தைவிட மூன்று மடங்கு அதிக திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com