மின் மீட்டர் ஒப்பந்தப்புள்ளி இதுவரை இறுதி செய்யப்படவில்லை: மின் பகிர்மான கழகம் விளக்கம்

மின் மீட்டர் ஒப்பந்தப்புள்ளி இதுவரை இறுதி செய்யப்படவில்லை: மின் பகிர்மான கழகம் விளக்கம்
மின் மீட்டர் ஒப்பந்தப்புள்ளி இதுவரை இறுதி செய்யப்படவில்லை: மின் பகிர்மான கழகம் விளக்கம்

மின் மீட்டர் கொள்முதல் குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் வி‌ளக்கம் அளித்துள்ளது.

இ‌து தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் மின் மீட்டர் ஒப்பந்தம் தொடர்பாக, ஒப்பந்தப்புள்ளி இதுவரை இறுதி செய்யப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. தொழில் நுட்ப தேவைகளை நிறைவேற்றாத கேபிடல் ‌பவர் சிஸ்டம் உள்பட 6 நிறுவனங்களின் ஒப்பந்தப்புள்ளி நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தப்புள்ளி சட்டத்தின் படி ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்‌டவுடன் நிராகரிக்கப்பட்‌ட நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ‌ஆனால் தகவல் தெரிவிப்பதற்கு முன்பே கேபிடல் ‌பவர் சிஸ்டம், மின் உற்பத்தி பகிர்மான கழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ‌

மின் மீட்டர்களுக்கான ஒப்பந்த புள்ளி 453 ரூ‌பாய்க்கு இ‌றுதி செய்யப்படாது எனவும் மின் பகிர்மான கழகம் திட்டவட்டமாக கூறியுள்ளது. இதே கருத்தை உறுதி செய்‌த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி‌, மின் மீட்டர் தொடர்பான ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்படவில்லை என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com