\
10 ஆண்டுகளாக மின்சாரம் இல்லை: விஜய் மக்கள் மன்றத்தினரின் முயற்சியால் மின் இணைப்பு

10 ஆண்டுகளாக மின்சாரம் இல்லை: விஜய் மக்கள் மன்றத்தினரின் முயற்சியால் மின் இணைப்பு

10 ஆண்டுகளாக மின்சாரம் இல்லை: விஜய் மக்கள் மன்றத்தினரின் முயற்சியால் மின் இணைப்பு
Published on

நெல்லை மாவட்டம் சுண்டன் குறிச்சி கிராமத்தில் 10 ஆண்டுகளாக மின்சாரமின்றி தவித்த வீட்டிற்கு விஜய் மக்கள் மன்றத்தினர் மின்வசதி ஏற்பாடு செய்துள்ளனர். 150க்கும் அதிகமான வீடுகள் உள்ள சுண்டன் குறிச்சி கிராமத்தில் புஷ்பம் என்பவர் வீட்டில் மட்டும் மின்வசதி இல்லை. கணவரின்றி, 2 பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் அவரது சிரமத்தை உணர்ந்து விஜய் மக்கள் மன்றத்தினர் அவரது வீட்டிற்கு மின் இணைப்பு கிடைப்பதற்காக வீட்டருகே 2 மின்கம்பங்கள் நட்டு கொடுத்தனர். அதனையடுத்து, மின்வாரியம் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு மின் இணைப்பு கொடுத்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com