'பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு' - வானிலை ஆய்வு மையம்

'பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு' - வானிலை ஆய்வு மையம்
'பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு' - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களிலும், வடகடலோர மாவட்டங்கள் மற்றும் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் முதல் 25ஆம் தேதி வரை நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com