சந்தையூரில் சர்ச்சைக்குரிய சுவர் பாதுகாப்புடன் இடிப்பு!

சந்தையூரில் சர்ச்சைக்குரிய சுவர் பாதுகாப்புடன் இடிப்பு!

சந்தையூரில் சர்ச்சைக்குரிய சுவர் பாதுகாப்புடன் இடிப்பு!
Published on

மதுரை மாவட்டம் சந்தையூரில் சர்ச்சைக்குரிய சுவர் பலத்த பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது.

சந்தையூரில் கோயிலைச் சுற்றி ஒரு பிரிவினர் சுற்றுச்சுவர் கட்டியுள்ளனர். இது, எதிர்காலத்தில் தீண்டாமைச் சுவராக மாறும் என அச்சம் தெரிவித்து 65 நாட்களாக மறு பிரிவினர் மலைப்பகுதியில் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த 30ம் தேதி போராட்டத்தின்போது ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலை வாங்க மறுத்து போராட்டக்காரர்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர். 

சுற்றுச்சுவரை இடித்தால்தான் உடலை வாங்குவோம் என்று அவர்கள் கூறியதால், மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தலைமையில், இரு பிரிவினரிடையே சமாதானக் கூட்டம் நடைபெற்றது. பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு அங்கன்வாடி மையம் அமைக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். ஆனால், சுற்றுச்சுவர் கட்டிய பிரிவினரில் ஒரு சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. 

சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதால் மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு ஊருக்குள் வர வேண்டும் என்று மலைப்பகுதிக்குச் சென்று கோட்டாட்சியர் சுகன்யா பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், உயிரிழந்தவரின் உடலை வாங்கி அடக்கம் செய்துவிட்டு ஊர் திரும்பப் போவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். 

சுவர் இடிக்கப்பட்ட பகுதியில் ஓரிரு நாட்களில் அங்கு அங்கன்வாடி மையம் அமைக்கும் பணி தொடங்கப்படும் எனத் தெரிகிறது. அந்த பகுதியில் முன்னெச்சரிக்கைக்காக 200 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com