திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பூங்கோதை ஆலடி அருணா. மறைந்த மூத்த திமுக தலைவர்களில் ஒருவரான ஆலடி அருணாவின் மகளான இவர், கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தின்போது தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகித்தார். பூங்கோதை மருத்துவரும் கூட.
 
இந்நிலையில் இவர் நேற்று மதியம் மயக்க நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு நெல்லையில் உள்ள ஷிஃபா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
பூங்கோதையின் உடல்நிலை குறித்து ஷிஃபா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா மயக்க நிலையில் எங்களுடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். தற்போது விழித்துள்ளார். அவருடைய உடல்நிலை குறித்து அளவீடுகள் திருப்தியாக உள்ளன. அவருக்கு தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சையளிக்கப்படுகிறது. மருத்துவர்கள் குழு தொடர்ந்து அவரை கண்காணித்து வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com