பொங்கல் பரிசுப் பொருட்களை பிற மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்தது ஏன்?: ஓபிஎஸ்

பொங்கல் பரிசுப் பொருட்களை பிற மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்தது ஏன்?: ஓபிஎஸ்
பொங்கல் பரிசுப் பொருட்களை பிற மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்தது ஏன்?: ஓபிஎஸ்

அரசு வழங்கிய பொங்கல் பரிசுப் பொருட்கள் தரமாக இல்லை என யாரும் தவறான கருத்துகளை பரப்பவில்லை என்றும் உண்மையை தான் மக்கள் கூறுகின்றனர் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

பொங்கல் பொருட்கள் தரமில்லை என சிலர் விஷமத்தனமான கருத்துகளை பரப்பி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய தகவலை குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை ஓபிஎஸ் வெளியிட்டுள்ளார். தரமற்ற பொருட்கள் தரப்படுவது தொடர்பான காட்சிகள் சமூக தளங்களில் பரவி வருவதாகவும் ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும் பெரும்பாலான பொங்கல் பரிசுப்பொருட்கள் வட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றின் மீது இந்தியிலும் ஆங்கிலத்திலுமே தகவல்கள் உள்ளதாகவும் ஓபிஎஸ் கூறியுள்ளார். இப்பொருட்களை விற்கும் நிறுவனங்கள் தமிழகத்தில் இல்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்ட குளறுபடிகள் குறித்து விரிவான விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com