பொங்கல் பரிசு தர ரூ.2363 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு அரசாணை

பொங்கல் பரிசு தர ரூ.2363 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு அரசாணை

பொங்கல் பரிசு தர ரூ.2363 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு அரசாணை
Published on

பொங்கல் பரிசாக அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 தர ரூ.2,363 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த ஆண்டும் பொங்கல் பரிசாக ரூ.1000, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி பொங்கல் பரிசாக ரூபாய் 1000 தர ரூ.2363 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சர்க்கரை அட்டைதாரர்கள் அரிசி ரேஷன் அட்டைதாரர்களாக மாற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், பொங்கல் பரிசு பெறும் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com