"கூட்டணி தர்மம் இருப்பதால் தான் மௌனமாக இருக்கிறேன்" - பொன்.ராதாகிருஷ்ணன்

"கூட்டணி தர்மம் இருப்பதால் தான் மௌனமாக இருக்கிறேன்" - பொன்.ராதாகிருஷ்ணன்

"கூட்டணி தர்மம் இருப்பதால் தான் மௌனமாக இருக்கிறேன்" - பொன்.ராதாகிருஷ்ணன்
Published on

கூட்டணி தர்மம் இருப்பதால் தான் மௌனமாக இருக்கிறேன் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டம் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் “அமைச்சர் ஜெயக்குமார் என்னைப்பற்றி சில விஷயங்கள் பேசியுள்ளார். இவர்கள் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு சான்றிதழ் தர வேண்டியது இல்லை. கூட்டணி தர்மம் இருப்பதால் தான் மௌனமாக இருக்கிறேன். நேரில் பார்க்கும் போது அமைச்சர் ஜெயக்குமாருடன் சில விஷயங்கள் பேசுவேன்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com