அதிமுக அழிந்துவிட்டது: பொன்.ராதாகிருஷ்ணன்

அதிமுக அழிந்துவிட்டது: பொன்.ராதாகிருஷ்ணன்
Published on

அதிமுக அழிந்துவிட்டதாகவும், திமுக படிப்படியாக அழிந்துகொண்டிருப்பதாகவும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், திராவிடக் கட்சிகள் அழியும் நிலையில் இருப்பதால், மக்கள் புதிய தேடலைத் தொடங்கியுள்ளனர். அந்த தேடல் நிச்சயம் பாஜகவைதான் என்று தெரிவித்தார். நீட் தேர்வால் மாணவர்களுக்கு நன்மையே ஏற்படும் என்று கூறிய அவர், கல்வியைப் பற்றி தமிழக அரசுக்குக் கவலையில்லை என்பதால்தான், நீட் தேர்வை வேண்டாம் என்று கூறுவதாகவும் குற்றம்சாட்டினார். இந்த ஆண்டு நீட் தேர்வு வேண்டாம் என்றால் அடுத்த ஆண்டிற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com