வாக்குச்சாவடி ஹிஜாப் விவகாரம்: பாஜக முகவருக்கு ஆதரவாக பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

வாக்குச்சாவடி ஹிஜாப் விவகாரம்: பாஜக முகவருக்கு ஆதரவாக பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து
வாக்குச்சாவடி ஹிஜாப் விவகாரம்: பாஜக முகவருக்கு ஆதரவாக பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

பாஜக முகவர் செய்தது தவறில்லை என விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.  ராதாகிருஷ்ணன் பேசும்போது,

"நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு திமுக அரசு அராஜகத்தை கட்டவிழ்த்துள்ளது. பணபலம், அதிகார பலம், ஆள் பலம் அகியவற்றின் மூலமாக தங்களுக்கு எதிராக போட்டியிட்டவர்களை களத்திலிருந்து வெளியேற்றக் கூடிய வேலையில் ஈடுபட்டனர்.

மாநிலம் முழுவதும் வேட்பாளர், கட்சியினர் தாக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் பார்வை சற்று மாற வேண்டும். ஆளுங்கட்சியின் அராஜகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மேலூரில் பாஜக முகவர் செய்தது தவறில்லை. ஹிஜாப் எதிர்ப்பது நோக்கமல்ல. சாதாரண பெண்களைப்போல வரவேண்டும் என்பதே விருப்பம். இதில் என்ன தவறு இருக்கிறது. தேர்தல் ஆணையம் எந்த ஒரு நபரும் முகத்தை மூடிக்கொண்டு சென்றால் ஏற்றுக்கொள்வார்களா? நாளை வாக்கு எண்ணிக்கையின்போது முகத்திரை அணிந்து கொண்டு சென்றால் ஏற்றுக்கொள்வார்களா?

விமான நிலையத்தில் முகத்திரையை கழட்டி முகத்தைக் காட்டுங்கள் என தெரிவிக்கிறார்கள். அது சரியா தவறா? முகவர் தன்னுடைய கடமையை செய்து இருக்கிறார். எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரிதான். அவர் சில கேள்விகள் கேட்கும்போது அதிகாரிகள் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் நாம்.

எங்களை பொறுத்தவரை பல இடங்களில் நடைபெற்றுள்ள திருத்த முடியாத அளவுக்கு உள்ள தவறுகள், பிரச்னைகள் குறித்து வழக்குப்பதிவு செய்யப்படாமலே உள்ளது. இது சரியான தேர்தல் நடைமுறையாக தெரியவில்லை. ஆளுங்கட்சியின் அழுத்தம் தான் இதற்கு காரணம் என நினைக்கிறேன். இவற்றையெல்லாம் மீறி பாஜக மிகச்சிறந்த வெற்றியை பெறும்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com