பொள்ளாச்சி பாலியல் கொடூர புகார் : மேலும் ஒருவர் கைது

பொள்ளாச்சி பாலியல் கொடூர புகார் : மேலும் ஒருவர் கைது
பொள்ளாச்சி பாலியல் கொடூர புகார் : மேலும் ஒருவர் கைது

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக பெண் ஒருவர் புதிய தலைமுறையிடம் கூறியதை அடுத்து, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சியை சேர்ந்த பெண் ஒருவர், தன்னை ஒரு நபர் பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோவை பதிவு செய்து மிரட்டியதாக குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக கோவையை சேர்ந்த பாலா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பொள்ளாச்சி காவல்நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்ய மாவட்ட கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உத்தரவிட்டார். பாலாவிடம் விசாரித்து, அவருடன் இன்னும் எத்தனை பேர் கூட்டு என்றும், அவரால் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

முன்னதாக, அப்பெண் புதிய தலைமுறையிடம் பேசிய போது, “3 வருடங்களாக நாங்கள் காதலித்தோம். ஆசை வார்த்தை காட்டி என்னை கூட்டிச் சென்று பலவந்தப்படுத்தி, ஆபாச புகைப்படங்கள் எடுத்தான். என்னை மிரட்டி என்னிடம் இருந்து காசு, பாணம் நிறைய வாங்க ஆரம்பித்தான். அதன்பின்னர் அவனுக்கு தேவையான பைக், போன் முதலியவற்றையும், வீட்டுக்கு தேவையான பொருட்களையும் வாங்கிக்கொடுக்கச் சொல்லி என்னை மிரட்டினார். இல்லையென்றால் புகைப்படங்களை ஃபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் எல்லாம் பரப்பி மானத்தை வாங்குவேன் என மிரட்டினான். 

என்னைப்போல பாதிக்கப்பட்ட பெண்கள், நான் அவனை லவ் பண்ணுகிறேன் என தெரிந்ததும் என்னை அழைத்து பேச ஆரம்பித்தார்கள். இனிமேல் என்னைப்போன்று யாரும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக நான் புகார் அளித்தேன். நேற்று மாலை புகார் அளித்தேன், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என தெரிவித்திருந்தார்.  
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com