தமிழகம் முழுவதும் நாளை போலியோ முகாம்கள்

தமிழகம் முழுவதும் நாளை போலியோ முகாம்கள்
தமிழகம் முழுவதும் நாளை போலியோ முகாம்கள்

தமிழ்நாடு முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து போடப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

போலியோ சொட்டு மருந்து போடுவதற்கு, மாநிலம் முழுவதும் 43 ஆயிரத்து 500 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 1,647 முகாம்களில் சொட்டு மருந்து போடப்பட உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முகாம்களில் சொட்டு மருந்து போட முடியாதவர்கள், அடுத்த 3 நாட்களுக்குள் மருந்து எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் போலியோ சொட்டு மருந்து செலுத்த வேண்டும் என்று மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com