சென்னை அயனாவரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சென்னை அயனாவரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சென்னை அயனாவரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
Published on

சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த 4ம் தேதி ஆயுதப்படை காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது உதவி ஆய்வாளரும் உயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் இரவு பணியிலிருந்த உதவி ஆய்வாளர் சதீஷ் குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். நள்ளிரவு 1.45 மணியளவில் எஸ்.ஐ சதீஷ் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்று பேப்பரில் சதீஷ் எழுதி வைத்திருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இதனிடையே காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சியைக் கொண்டு இதுதொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அயனாவரம் காவல் நிலையத்தில் இரவுப் பணியிலிருந்த காவலர்களிடமும் அதிகாரிகளின் விசாரணை நடைபெற்று வருகிறது. 2011ஆம் ஆண்டு நேரடி எஸ்ஐயாக தேர்வு செய்யப்பட்ட சதீஷ் குமார், கும்பகோணத்தைச் சேர்ந்தவர் ஆவார். அயனாவரத்தில் ரவுடிகளை ஒழிப்பதில் திறமையாக செயல்பட்டவர் என்று பாராட்டு பெற்றவர் உதவி ஆய்வாளர் சதீஷ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com