மார்ச் 8ல் நடைபெற இருந்த காவலர் உடற்தகுதி தேர்வு ஒத்திவைப்பு - சீருடை பணியாளர் தேர்வாணையம்

மார்ச் 8ல் நடைபெற இருந்த காவலர் உடற்தகுதி தேர்வு ஒத்திவைப்பு - சீருடை பணியாளர் தேர்வாணையம்
மார்ச் 8ல் நடைபெற இருந்த காவலர் உடற்தகுதி தேர்வு ஒத்திவைப்பு - சீருடை பணியாளர் தேர்வாணையம்

காவல் அதிகாரிகள் சட்டப்பேரவை தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதால் மார்ச் 8ல் நடைபெறவிருந்த இரண்டாம்நிலை காவலர் உள்ளிட்ட பணிகளுக்கான உடற்தகுதி தேர்வு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது, “ 2020 ஆம் ஆண்டுக்கான கிரேடு 2 காவலர் பணி, கிரேடு 11 சிறைக்காவலர்கள், தீயணைப்பு வீரர்களுக்கான தேர்வுகள் நடைபெற இருந்தன.தேர்வாணையம் இந்தத் தேர்வு தொடர்பான, சான்றிதழ்கள் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் வருகிற 08.03.2021 அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தேர்தல் பணியில் காவல் அதிகாரிகள் ஈடுபட உள்ளதால் அந்த தேர்வு தற்போது 12.04.2021 அன்று ஒத்திவைக்கப்படுகிறது. விபரங்கள் சரியான நேரத்தில் அறிவிக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏபரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவைத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com