தமிழ்நாடு
புத்தாண்டு கொண்டாட்டம்: காவல்துறை கட்டுப்பாடு
புத்தாண்டு கொண்டாட்டம்: காவல்துறை கட்டுப்பாடு
சென்னையில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட காவல்துறை தடை விதித்துள்ளது.
ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னையில் உள்ள நட்சத்திர மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்றும், புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு வரும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நட்சத்திர விடுதிகளுக்கு வரக்கூடியவர்களை , சிசிடிவி கேமராக்கள் வாயிலாக கண்காணிக்க வேண்டும் என்றும், ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.