குமரி: கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை - சிசிடிவியில் சிக்கிய ஆசாமி

குமரி: கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை - சிசிடிவியில் சிக்கிய ஆசாமி
குமரி: கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை - சிசிடிவியில் சிக்கிய ஆசாமி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சித்திரை மகாராஜபுரம் பகுதியில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்த CCTV கேமரா காட்சிகள் மூலம் சுசீந்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சித்திரை மகாராஜபுரத்தில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று கதவு உடைக்கப்பட்டு காணப்பட்டதை அப்பகுதியினர் பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். அதில் கோவில் கதவு மற்றும் உண்டியலை உடைத்து, உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. உண்டியலில் சுமார் 75 ஆயிரம் ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் - கொள்ளையன் நடந்து வரும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இக்காட்சிகள் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோன்று நாகர்கோவில் சைமன் நகர் பகுதியில் கடையின் பூட்டை உடைத்து 13 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நேசமணி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் நாகர்கோவில் அருகே வெவ்வேறு பகுதிகளில் இரண்டு கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com