விழுப்புரம்: பாஜக பிரமுகர் வீட்டில் 50 சவரன் கொள்ளை - காவல்துறை விசாரணை

விழுப்புரம்: பாஜக பிரமுகர் வீட்டில் 50 சவரன் கொள்ளை - காவல்துறை விசாரணை
விழுப்புரம்: பாஜக பிரமுகர் வீட்டில் 50 சவரன் கொள்ளை - காவல்துறை விசாரணை
பாஜக பிரமுகர் வீட்டில் அடையாளம் தெரியாத நபரால் சுமார் 50 பவுன் நகை திருடபட்டது. இந்த சம்பவத்தை குறித்து விக்கிரவாண்டி காவல்துறையினர் விரைந்து விசாரித்து வருகின்றனர்.
விக்கிரவாண்டி அடுத்துள்ள முண்டியம்பட்டத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் பாஜக ஓபிசி பிரிவின் மாவட்டத் துணைச் செயலாளர் ஆவார். விக்கிரவாண்டியில் உள்ள ராஜஸ்ரீ தனியார் சர்க்கரை ஆலையில் பணிபுரிகிற ரவி, காலை 9 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றுள்ளார். திரும்ப நள்ளிரவு 12 மணியளவில் வீடு திரும்பியபோது, வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு அடையாளம் தெரியாத மர்ம நபரால் சுமார் 50 பவுன் நகை மற்றும் 5 ஆயிரம் பணம் ஆகியவை திருடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து விக்கிரவாண்டி காவல்துறையினருக்கு ரவி தகவல் தெரிவித்ததன்பேரில், விக்கிரவாண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நகை திருடு போனதை  குறித்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட கை ரேகை நிபுணர்கள் நகை திருடப்பட்ட வீட்டில் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா நேரில் ஆய்வு செய்தார். பட்டப்பகலில் பூட்டிய வீட்டை உடைத்து நகை திருடிய இச்சம்பவம் அருகில் இருக்கக்கூடிய பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com