தொழிலதிபர் ரீட்டா முகத்தில் ரத்தக் காயங்கள் : தற்கொலையில் காவல்துறைக்கு சந்தேகம்..!

தொழிலதிபர் ரீட்டா முகத்தில் ரத்தக் காயங்கள் : தற்கொலையில் காவல்துறைக்கு சந்தேகம்..!
தொழிலதிபர் ரீட்டா முகத்தில் ரத்தக் காயங்கள் : தற்கொலையில் காவல்துறைக்கு சந்தேகம்..!

சென்னையில், கார் விற்பனை நிறுவன அதிபர் ரீட்டாவின் இறப்பில் காவல்துறையினருக்கு சில சந்தேகங்கள் எழுந்துள்ளன.

தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் ரீட்டாவின் முகத்தில் இரத்தக் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல அவர் உடல் ஜன்னல் திரைச்சீலை கம்பியில் தொங்கிய நிலையில் இருந்ததும் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரீட்டா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அறையின் கதவு உட்புறமாக தாழிட்டு இருந்தாலும், ஃப்ரெஞ்ச் டோர் எனப்படும் ஆளுயர ஜன்னலும் தாழிடப்படாமல் இருந்தது காவல்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மிகப்பெரிய செல்வந்தரான ரீட்டா, கார் விற்பனைத் தொழிலில் ஏற்பட்ட சரிவினால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரீட்டாவின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகின்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com