சென்னையில் கல்லூரி மாணவர்கள் பட்டாக் கத்தியுடன் ரயிலில் பயணித்து, நடைமேடையில் பட்டாக் கத்தியை உரசியபடி சென்ற வீடியோக்கள் அவ்வவ்போது வைரலாகி வருகின்றன. அதேபோல, ரூட்டுத் தலை தொடர்பான பிரச்னைகளிலும் கல்லூரி மாணவர்களின் பல்வேறு அட்டகாசங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகினறனர். இந்நிலையில், எண்ணூர் நெடுஞ்சாலையில் திருவெற்றியூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற தடம் எண் 101 என்ற பேருந்தை இரு கல்லூரி மாணவர்கள் நடுரோட்டில் நிறுத்தி ரீல்ஸ் செய்து அதனை தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.