பட்டியலின பள்ளி மாணவியை கடத்தி கட்டாய திருமணம் செய்ததாக இளைஞர் சிறையிலடைப்பு

பட்டியலின பள்ளி மாணவியை கடத்தி கட்டாய திருமணம் செய்ததாக இளைஞர் சிறையிலடைப்பு
பட்டியலின பள்ளி மாணவியை கடத்தி கட்டாய திருமணம் செய்ததாக இளைஞர் சிறையிலடைப்பு

ஓமலூர் அருகே பட்டியலின சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடத்தல், பால்ய திருமணம் செய்தல், பாலியல் வன்கொடுமை, சாதிய வன்கொடுமை உட்பட ஏழு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கருக்கல்வாடி கிராமம் கச்சாளன் தெருவைச் சேர்ந்தவர் கோகுல் (எ) கோகுல்கிருஷ்ணன்( 22 வயது). இவர் பக்கத்து கிராமத்தில் உள்ள ஒரு நாட்டு செங்கல் சூளையில் கூலி வேலை செய்துவருகிறார். கோகுல் வேலைக்கு செல்லும்போது, பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பள்ளி சிறுமியிடம் பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பள்ளி சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்து கொண்டதாக புகார் எழுந்தது. இதனிடையே பள்ளிக்கு சென்ற தனது மகளை காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல்போன சிறுமி குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தாரமங்கலம் அருகேயுள்ள ஒரு கிராமத்தில், கோகுலின் செல்போன் சிக்னல் காட்டியதைத் தொடர்ந்து, அங்கு விசாரித்ததில் அவர் அங்கே உறவினர் வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு சென்ற ஓமலூர் போலீசார் கோகுலை பிடித்து, சிறுமியை மீட்டனர். பின்னர் ஓமலூர் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து நடத்திய விசாரணையில், பட்டியலின பள்ளி சிறுமியை கடத்திச்சென்ற கோகுல், மாணவியை கட்டாய பால்ய திருமணம் செய்துகொண்டது தெரிய வந்தது. மேலும், பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து வாலிபர் கோகுல் மீது மாணவியை மிரட்டி கடத்தி சென்றது, பால்ய திருமணம் செய்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் சாதிய வன்கொடுமை செய்தல் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து கோகுலை கைதுசெய்து ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து பட்ட்லியன பள்ளி சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்த இந்த வழக்கு குறித்து ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதா விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com