பாடகி சின்மயி போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு

பாடகி சின்மயி போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு
பாடகி சின்மயி போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு

தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக சென்னையில் மே 12ம் தேதி பாடகி சின்மயி போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இந்தப் புகாரை அடுத்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, இதுகுறித்து விசாரிக்க மூத்த நீதிபதி பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டார். மேலும் இக்குழு ரகசியமாக விசாரணை நடத்தும் எனக் கூறப்பட்டது. 

நீதிபதி பாப்டே தலைமையிலான குழுவில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். பின்னர் நீதிபதி பாப்டே தலைமையிலான விசாரணைக் குழு,புகாருக்கான முகாந்திரம் ஏதுமில்லை எனக் கூறி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை தள்ளுபடி செய்தது. மேலும் உச்சநீதிமன்றத்தில் உள்விசாரணைக் குழு நடத்திய விசாரணையின் விவரங்கள் பொதுவெளியில் வெளியாகாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து பெண்கள் பாதுகாப்பு தொடர்பான அமைப்புகளில் இணைந்து செயல்பட்டு வரும் சின்மயி, சென்னை காவல்துறையில் கடிதம் ஒன்றினை கொடுத்தார். அதில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது முன்னாள் பெண் ஊழியர் கொடுத்துள்ள பாலியல் புகாரை மீண்டும் விசாரிக்க வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில் தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக சென்னையில் மே 12ம் தேதி பாடகி சின்மயி போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சின்மயி போராட்டம் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com