ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகம் மற்றும் தமிழக கடலோர பாதுகாப்பு பிரிவு இணைந்து இணைய வழியில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. அதில் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, தமிழகத்தில் கடலோர பாதுகாப்பிற்கு தனி பிரிவு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். குறிப்பாக சுமார் ஆயிரத்து 76 கிலோமீட்டர் கடலோர பாதுகாப்பில் தமிழக மீனவர்கள் தான் கண்கள் மற்றும் காதுகள்போல் செயல்படுவதாக கூறியுள்ளார்.