சென்னையில் எந்தெந்த நேரங்களில் பட்டாசு வெடிக்க அனுமதி? - காவல் ஆணையர் விளக்கம்

சென்னையில் எந்தெந்த நேரங்களில் பட்டாசு வெடிக்க அனுமதி? - காவல் ஆணையர் விளக்கம்

சென்னையில் எந்தெந்த நேரங்களில் பட்டாசு வெடிக்க அனுமதி? - காவல் ஆணையர் விளக்கம்
Published on

எந்தெந்த நேரங்களில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது குறித்து உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்ற உள்ளோம் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணிவரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்திருக்கிறார். மேலும், 18 ஆயிரம் போலீஸ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றும், தி.நகரில் நகைதிருட்டை தடுக்க பெண்களுக்கு ஸ்கார்ப் கொடுக்க உள்ளதாகவும், தி.நகரில் மட்டும் 800 போலீஸ் கொண்ட தனிப்படை அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும், பேருந்துகளில் பட்டாசு கொண்டு போனால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 383 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com