போராட்டம் நடக்கப்போவதாக பரவிய தகவல் - பெசன்ட் நகர் பீச்சில் மக்களுக்கு அனுமதி மறுப்பு

போராட்டம் நடக்கப்போவதாக பரவிய தகவல் - பெசன்ட் நகர் பீச்சில் மக்களுக்கு அனுமதி மறுப்பு
போராட்டம் நடக்கப்போவதாக பரவிய தகவல் - பெசன்ட் நகர் பீச்சில் மக்களுக்கு அனுமதி மறுப்பு

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடக்கவுள்ளதாக பரவிய தகவலை அடுத்து அங்கு மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் வன்முறைகளும் நிகழ்ந்துள்ளன. தமிழகத்திலும் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் போராட்டம் நடத்த உள்ளதாக சமூக வலைதளங்கள் மூலமாக தகவல்கள் பரவின.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு மக்கள் செல்வதற்கு காவல்துறையினர் தற்காலிக தடை விதித்துள்ளனர். இதனால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து விடுமுறையை கொண்டாட, குடும்பமாக கடற்கரைக்கு வரும் மக்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதற்கிடையே சமூக வலைதளங்கள் மூலமாக கூடிய 100-க்கும் மேற்பட்டோர், பெசன்ட் நகர் பேருந்து நிலையம் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com