கொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி

கொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி

கொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி
Published on

கூடுவாஞ்சேரியில் திருடர்களை பிடித்துக் கொடுத்த பொதுமக்கள் மீது, காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம் வள்ளலார் நகர் பகுதியில் உள்ள வீட்டில், 2 இளைஞர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். தப்ப முயன்ற கொள்ளையர்களை விரட்டிப் பிடித்து அப்பகுதி மக்கள், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த காவல்துறையினர், கொள்ளையர்களை மீட்டு காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். அத்துடன் அங்கு திரண்டிருந்த மக்களை கலைந்து செல்ல அறிவுறுத்திய காவல்துறையினர், திடீரென தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com