லத்தியால் அடித்ததால் நண்பர்களுடன் காவலரை தாக்கிய இளைஞர்

லத்தியால் அடித்ததால் நண்பர்களுடன் காவலரை தாக்கிய இளைஞர்
லத்தியால் அடித்ததால் நண்பர்களுடன் காவலரை தாக்கிய இளைஞர்

சென்னையில் வாகனச் சோதனையின்போது நிற்காமல் சென்றதால் லத்தியால் தாக்கிய காவலரை இளைஞர்கள் அடித்து உதைத்தனர். 

சேத்துப்பட்டில் தலைமைக் காவலர் கருணாகரன் மற்றும் காவலர் முருகன் ஆகியோர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுபோதையில் 11 பேர் இருச்சக்கர வாகனங்களை தாறுமாறாக ஓட்டிச் சென்றதாக தெரிகிறது. அவர்களை காவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால், அவர்கள் நிற்காமல் சென்றுள்ளனர். அப்போது இருச்சக்கர வாகனத்தில் சென்ற அயனாவரத்தைச் சேர்ந்த அஜய்குமார் என்பவரை காவலர் முருகன் லத்தியால் தாக்கியதாக தெரிகிறது. 

இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. எனினும், அவர்கள் நிற்காமல் சென்று விட்டனர். சிறிது நேரம் கழித்து அஜய்குமார் தனது நண்பர்களான வினோத், பிரபு, பாலு, அய்யப்பா, விஜயகுமார், அசோக்குமார், புருஷோத்தம்மன் ஆகியோருடன் வந்து காவலர் முருகனைத் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக முருகன் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com