உதயநிதியை காத்து நின்ற தொண்டர்கள்: விடாமல் கைது செய்து இழுத்துச் சென்ற போலீசார்

உதயநிதியை காத்து நின்ற தொண்டர்கள்: விடாமல் கைது செய்து இழுத்துச் சென்ற போலீசார்
உதயநிதியை காத்து நின்ற தொண்டர்கள்: விடாமல் கைது செய்து இழுத்துச் சென்ற போலீசார்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் பரப்புரையில் ஈடுபட்ட திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை போலீசார், தொண்டர்களின் எதிர்ப்பையும் மீறி கைது செய்து அழைத்து சென்றனர்.

2021 சட்டமன்றத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. அதன்படி திமுக சார்பில் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களாக பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் அனுமதியின்றி பரப்புரையில் ஈடுபட்டதாக உதயநிதி கடந்த இரண்டு நாட்களும் கைது செய்யப்பட்டார். அப்போது கைது செய்தாலும் பரப்புரையில் ஈடுபடுவேன் என சூளுரைத்தார் உதயநிதி.

இந்நிலையில் இன்று மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உதயநிதி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது போலீசார் அவரை கைது செய்ய முயற்சி செய்தனர். ஆனால் திமுக தொண்டர்கள் அவரை கைது செய்ய விடாமல் போலீசாரை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் திமுக தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது. ஆனாலும் போலீசார் விடாமல் உதயநிதியை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com