போராட்டத்தில் சென்னை பல்கலை. மாணவர்கள்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய காவல்துறை

போராட்டத்தில் சென்னை பல்கலை. மாணவர்கள்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய காவல்துறை

போராட்டத்தில் சென்னை பல்கலை. மாணவர்கள்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய காவல்துறை
Published on

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாவது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய சென்னை பல்கலைக்கழக மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து பின்பு விடுவித்தனர். 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீதும் காவல்துறையினர் நடத்திய தாக்குதலை கண்டித்தும் சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கடந்த மூன்று நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில் மூன்றாவது நாளான நேற்றைய போராட்டத்தில் ஈடுபட்ட 17 மாணவ, மாணவிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக மாணவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

பின்னர் மாணவர்களை கைது செய்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com