'யூ டியூப்' சேனல் நடத்தி வரும் மதன் என்பவர், தடை செய்யப்பட்ட 'பப்ஜி' விளையாட்டுகளின் வாயிலாக சிறுவர்களை தவறான பாதைக்கு திசை திருப்புவதாகவும், பெண்களிடம் ஆபாசமாக பேசுவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, பெண்களை ஆபாசமாக சித்தரித்தல், ஆபாசமாக பேசுதல், ஐ.டி. சட்டத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்தியதாக மதன் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 509, 294 B உள்ளிட்ட 4 பிரிவுகளில் மதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது