ஒன்றும் அறியாத ஒன்றரை வயதே ஆன பிஞ்சு குழந்தையை விழுப்புரத்தைச் சேர்ந்த தாய் துளசி இரக்கமின்றி தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அனைவர் மனதையும் கனமாக்கியுள்ளது. மோட்டூரைச் சேர்ந்த வடிவழகனுக்கும் அவரது மனைவி துளசிக்கும் அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் துளசியை ஆந்திராவில் உள்ள அவரது தாயாரிடம் விட்டுவிட்டு, வீட்டிற்கு வந்த வடிவழகன் அங்கிருந்த மனைவியின் செல்ஃபோனை எடுத்துப் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். இளைய மகனை துளசி கொடூரமாக தாக்கும் வீடியோக்களை அவரே பதிவு செய்து வைத்திருந்தது தெரியவந்தது. ஒரு மாதத்திற்கு முன்பு குழந்தையை அவர் தாக்கியிருந்தது தெரியவந்தது.