\
ஆன்லைன் மோசடி
ஆன்லைன் மோசடிweb

மதுரையில் ஆன்லைன் முதலீடு மோசடி.. காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்!

மதுரை பகுதியில் ஆன்லைன் முதலீடு மோசடியால் பாதிக்கப்பட்டோர் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.
Published on
Summary

மதுரை பகுதியில் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்திற்கான ஆன்லைன் செயலி மூலம் 45 நாட்களில் பணம் இரட்டிப்பு, அதிக லாபம் என ஆசைவார்த்தைகள் கூறி கோடிக்கணக்கில் நிதி மோசடி நடந்துள்ளது. இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பணத்தை இழந்தவர்கள் மாவட்ட சைபர் கிரைம் பிரிவிலும் 1930 இலவச எண்ணிலும் புகார் அளிக்கலாம் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரை பகுதியில் ஆன்லைன் செயலி மூலம் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் முதலீடு செய்தால் 45 நாட்களில் பணம் இரட்டிப்பாகும், அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆசைவார்த்தைகள் கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன. மோசடி தொடர்பாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

online scam
online scama

மோசடியால் பணத்தை இழந்தவர்கள் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையிலும், 1-9-3-0 என்ற இலவச உதவி எண்ணிலும் புகார் அளிக்கலாம். அதிக லாபம் பெற்றுத் தருவதாகக் கூறும் நபர்களை நம்பி பொதுமக்கள் தங்களது பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

ஆன்லைன் மோசடி
நேபாளத்தில் பலி எண்ணிக்கை 579ஆக உயர்வு.. 83 தமிழர்களின் நிலை என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com