“திருவள்ளுவரை சிமிழுக்குள் அடைக்கப் பார்க்காதீர்கள்” - வைரமுத்து

“திருவள்ளுவரை சிமிழுக்குள் அடைக்கப் பார்க்காதீர்கள்” - வைரமுத்து
“திருவள்ளுவரை சிமிழுக்குள் அடைக்கப் பார்க்காதீர்கள்” - வைரமுத்து

திருவள்ளூவரை எந்தச் சிமிழுக்குள்ளும் அடைக்கப்பார்க்காதீர்கள் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து நேற்று வெளியிடப்பட்ட பதிவில், “கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்” என்ற குறள் கூறப்பட்டிருந்தது. குறளுக்கான விளக்கம் ஒன்றினையும் பதிவிட்டிருந்தது.

அத்துடன், திருவள்ளுவர் காவி நிற உடையில் உள்ள படத்தையும் பதிவிட்டிருந்தனர். அந்த படத்தில் வள்ளுவர் திருநீர் பூசி, ருத்ராட்சம் அணிந்த நிலையில் இருந்தார். வழக்கமாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் புகைப்படங்களில், திருவள்ளுவர் வெண்மை நிற ஆடை அணிந்திருப்பார். ஆனால் இந்தப் பதிவில் காவி நிறத்தில் அவர் உடை அணிந்திருந்ததால் இதற்கு திமுக, கம்யூனிட்ஸ்டு ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள வைரமுத்து, “திருவள்ளுவர் ஓர் அறிவுக்கடல். அவரை எந்தச் சிமிழுக்குள்ளும் அடைக்கப் பார்க்காதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com