தமிழகத்திற்கு அதிக நிதி வழங்கப்பட்டதா? பிரதமர் மோடி சொன்னது என்ன?

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு வரலாறு காணாத அளவில் நிதியை ஒதுக்கியிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு வரலாறு காணாத அளவில் நிதியை ஒதுக்கியிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

திருச்சியில் பேசிய பிரதமர் மோடி, ”தமிழகத்தின் வளர்ச்சிக்காக வரலாறு காணாத நிதியை ஒதுக்கி வருகிறோம். 2014-க்கு முன் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ரூ.30 லட்சம் கோடியை தந்தது; ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் ரூ.120 லட்சம் கோடியை தந்துள்ளோம்.

2014-க்கு முன் தமிழகம் பெற்ற நிதியை விட கடந்த 10 ஆண்டுகளில் இரண்டரை மடங்கு கூடுதல் நிதி அளித்துள்ளோம். நெடுஞ்சாலைத்துறைக்கும் ரயில்வே துறைக்கும் 3 மடங்கு அதிக நிதியை தமிழகத்திற்கு அளித்துள்ளோம். ஏழைகள் இலவசமாக ரேஷன் பொருட்களை பெறவும் இலவச மருத்துவ சிகிச்சைக்கும் பெரும் தொகையை அளிக்கிறோம்” என்றார்.

இதுகுறித்த செய்தியை அறிய, இந்த வீடியோவைப் பார்க்கவும்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com