சின்னதம்பியை கும்கியாக மாற்ற தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு !

சின்னதம்பியை கும்கியாக மாற்ற தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு !

சின்னதம்பியை கும்கியாக மாற்ற தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு !
Published on

சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் விலங்கு நல ஆர்வலர் முறையீடு செய்துள்ளார்.

கோவை மாவட்டத்திலுள்ள பெரியதடாகம் ‌வனப்பகுதியில் விவசாய நிலங்களை சின்னதம்பி என்ற காட்டுயானை சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து பெரிய போராட்டத்துக்கு பிறகு சின்னதம்பியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். 

இதனையடுத்து வாகனம் மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள டாப்சிலிப் வனப்பகுதிக்கு சின்னத்தம்பி யானை கொண்டு செல்லப்பட்டது.  சின்னதம்பி யானையின் இருப்பிடத்தை அறிய அதன் உடலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தியிருந்தனர். ஆனால் டாப்சிலிப் பகுதியில் விடப்பட்ட யானை சின்னத்தம்பி இரண்டு நாட்களுக்குள் மீண்டும் ஊருக்குள் புகுந்தது. இதற்கிடையே ஊருக்குள் சுற்றித்திரியும் சின்னதம்பியை கும்கியாக மாற்றப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில் சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் விலங்கு நல ஆர்வலர் அருண் பிரசன்னா முறையீடு செய்துள்ளார். அந்த முறையீட்டில் முறையீட்டை யானைகளை வேறு இடத்துக்கு கொண்டு செல்வது தொடர்பாக விதிகளை வகுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த முறையீட்டை கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்றம், மனுத்தாக்கல் நடைமுறைகள் முடிந்தால் இன்று மதியமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com