சென்னை அண்ணாநகரில் உள்ள புற்நகர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி கலன் அமைக்க திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை அண்ணாநகரில் உள்ள புறநகர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி கலன் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஒரு நிமிடத்திற்கு 150 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கலனை சோதனை முறையில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.