காரைக்கால் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய கடற்கொள்ளையர்

காரைக்கால் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய கடற்கொள்ளையர்
காரைக்கால் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய கடற்கொள்ளையர்

இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் காரைக்கால் மீனவர்கள் மூவர் படுகாயமடைந்தனர்.

காரைக்காலிலிருந்து 200க்கும் அதிகமான பைபர் படகுகளில் 500க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே அவர்கள் மீன்பிடித்த போது, கடற்கொள்ளையர்கள் அங்கு வந்துள்ளனர். கிளிஞ்சல்மேட்டை சேர்ந்த செண்பகம், குப்புசாமி ஆகியோருக்கு சொந்தமான படகை சுற்றிவளைத்த கடற்கொள்ளையர்கள் அரிவாள், கட்டை போன்றவற்றால் மீனவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். வலைகள், ஜிபிஎஸ் கருவி, டீசல், மீன் என 2 படகுகளிலும் 5 லட்சம் மதிப்பிலான பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் காயமடைந்த குப்புசாமி, நாகேந்திரன், ஸ்ரீதரன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com