’இயற்பியல் பாடப்பிரிவு கேள்விகள் கடுமையாக இருந்தது’ - நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து

’இயற்பியல் பாடப்பிரிவு கேள்விகள் கடுமையாக இருந்தது’ - நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து
’இயற்பியல் பாடப்பிரிவு கேள்விகள் கடுமையாக இருந்தது’ - நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து

நீட் தேர்வியல் இயற்பியல் பாடப்பிரிவு வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்று முடிந்தது. நாடு முழுவதும் 16.14 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வை எழுதியுள்ளனர். இதில், இயற்பியல் வினாக்கள் கடினமாக இருந்ததாக சென்னை மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேபோல, உயிரியல் வினாக்கள் எளிதாக இருந்ததாகவும், இயற்பியல் பாடப்பிரிவு கேள்விகள் கடினமாக இருந்ததாக கன்னியாகுமரி மாணவிகள் தெரிவித்துள்ளனர். தஞ்சை மாணவர் கூறுகையில், இயற்பியலைத்தவிர, மற்ற பாடப்பிரிவில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிமையாக இருந்தது என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com