சுரங்க மெட்ரோவில் செல்போன் சிக்‌னல் எப்போது கிடைக்கும்?‌

சுரங்க மெட்ரோவில் செல்போன் சிக்‌னல் எப்போது கிடைக்கும்?‌
சுரங்க மெட்ரோவில் செல்போன் சிக்‌னல் எப்போது கிடைக்கும்?‌

சென்னை மெட்ரோ சுரங்கப் பாதை ரயிலில் பயணம் செய்யும்போது செல்போனில் பேச‌ சிக்னல் பூஸ்டர்கள் அமைக்கும் பணி ‌இரண்டு மாதங்களில் முடியும் என மெட்ரோ‌ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
கடந்த மே மாதம் 14ஆம் தேதி நேரு பூங்காவிலிருந்து திருமங்கலம் ‌வரை மெட்ரோ சுரங்க ரயில் சேவை தொடங்கப்பட்டது. 8 கிலோ மீட்டர் தூரம் வரை அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதையில், ரயில் பயணிகளுக்கு செல்போன் சிக்னல் கிடைக்காத நிலையே உள்ளது. 
சுரங்கப் பாதையில் ரயில் செல்லும்போது செல்போன் சிக்னல் பூஸ்டர்கள் அமைக்‌க முடிவதில்லை என்றும், நேரு பூங்காவிலிருந்து திருமங்கலம் வரை பூஸ்டர்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் மெட்ரோ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி இரண்டு மாதங்களுக்குள் முடியும் என்றும் ஜனவரி முதல் சுரங்க ரயிலில் பயணிக்கும் பொதுமக்கள் செல்போனில் பேச சிக்னல் ‌கிடைக்கும் எனவும் மெட்ரோ தெரிவித்துள்ளது.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com