மதுரை: கொரோனா தடுப்பூசி முன்பதிவுக்கு நாளை முதல் புதிய முறை

மதுரை: கொரோனா தடுப்பூசி முன்பதிவுக்கு நாளை முதல் புதிய முறை
மதுரை: கொரோனா தடுப்பூசி முன்பதிவுக்கு நாளை முதல் புதிய முறை

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள செல்போன் எண்ணுக்கு அழைத்து முன்பதிவு செய்துகொள்ளும் முறை நாளை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள தடுப்பூசி மையமான இளங்கோ மாநகராட்சி பள்ளி வளாகத்தில் கொரோனோ தடுப்பூசி செலுத்திக் கொள்ள தனிமனித இடைவெளி இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்தது குறித்து புதிய தலைமுறையில் நேற்று செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக மதுரை அரசு மருத்துவமனை தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு கட்டாய மாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்த விரும்புவோர் அதற்கான உதவி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போன் செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவிற்கு பின்னர் குறுஞ்செய்தி மூலம் தடுப்பூசி செலுத்த வேண்டிய தேதி மற்றும் நேரம் தெரிவிக்கப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com