சொந்த ஊர் வந்தடைந்தது பிலிப்பைன்ஸில் உயிரிழந்த தேனி மாணவரின் உடல்!

சொந்த ஊர் வந்தடைந்தது பிலிப்பைன்ஸில் உயிரிழந்த தேனி மாணவரின் உடல்!
சொந்த ஊர் வந்தடைந்தது பிலிப்பைன்ஸில் உயிரிழந்த தேனி மாணவரின் உடல்!

பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த தேனியைச் சேர்ந்த மருத்துவ மாணவனின் உடல் அரசு செலவில் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் போடிநாயக்கனூரைச் சேர்ந்த சஷ்டிகுமார் என்பவர், பிலிப்பைன்ஸில் மருத்துவம் படிக்க சென்று அங்கு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும், அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி, மாணவனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன்படி மாணவனின் உடல் பிலிப்பைன்ஸில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு காலை கொண்டுவரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com