சசிகலாவிற்கு 15 நாட்கள் பரோல் கேட்டு மனு

சசிகலாவிற்கு 15 நாட்கள் பரோல் கேட்டு மனு
சசிகலாவிற்கு 15 நாட்கள் பரோல் கேட்டு மனு

கணவர் நடராஜனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலாவிற்கு 15 நாட்கள் பரோல் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான நடராஜன் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார். கடந்த அக்டோபர் மாதம் நடராஜனுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை செய்த இடங்களில் தற்போது நோய் தோற்று ஏற்பட்டதையடுத்து சிகிச்சை பலனளிக்காமல் அவரின் உயிர் இன்று பிரிந்தது. தற்போது பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த இன்னும் சிறிது நேரத்தில் நடராஜனின் சொந்த ஊரான தஞ்சைக்கு உடல் எடுத்துச் செல்லப்படுகிறது.

இதனிடையே நடராஜனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலாவிற்கு 15 நாட்கள் பரோல் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவருக்கு எத்தனை நாட்கள் பரோல் கிடைக்கும் என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை. சிறைத்துறை அதிகாரிகள்தான் எத்தனை நாட்கள் பரோல் வழங்கலாம் என்பதை முடிவு செய்வார்கள். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போது கணவரை பார்ப்பதற்காக சசிகலாவுக்கு 5 நாட்கள் ‘பரோல்’ வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com