அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைத்த சீலை அகற்றக் கோரி இபிஎஸ் தரப்பில் மனு

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைத்த சீலை அகற்றக் கோரி இபிஎஸ் தரப்பில் மனு

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைத்த சீலை அகற்றக் கோரி இபிஎஸ் தரப்பில் மனு
Published on

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி அக்கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

அதிமுக தலைமை அலுவலகம் முன்பு நேற்று, பன்னீர்செல்வ்ம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, அதிமுக அலுவலகத்துக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.

இந்நிலையில் அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த மனுவை அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரிக்க வேண்டும் என அதிமுக தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன் முறையீடு செய்தார்.

இதைக் கேட்ட நீதிபதி சதீஷ்குமார், மனுத்தாக்கல் செய்யும் பட்சத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com