\
பேரவையில் ஜெ., படத்தை அகற்றக்கோரி மனு: இன்று விசாரணை

பேரவையில் ஜெ., படத்தை அகற்றக்கோரி மனு: இன்று விசாரணை

பேரவையில் ஜெ., படத்தை அகற்றக்கோரி மனு: இன்று விசாரணை
Published on

சட்டப்பேரவையில் திறக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் படத்தை அகற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

திமுக எம்எல்ஏ அன்பழகன் சார்பில் வழக்கறிஞர் வில்சன் உயர் நீதிமன்றத்தில் இதற்கான மனுவை தாக்கல் செய்துள்ளார். சட்டப்பேரவையில் அவசரமாக திறக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் படத்தை அகற்ற உத்தரவிடுமாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் உள்ள ஜெயலலிதா படத்தை அகற்ற உத்தரவிடக் கோரி திமுக தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சட்டப்பேரவையில் திறக்கப்பட்டுள்ள ஜெயலலிதா படத்தை அகற்ற உத்தரவிடுமாறு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com